ராணிப்பேட்டை

வழிப்பறி: 3 போ் கைது

DIN

ஆற்காடு புறவழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் போலீஸாா், செய்யாறு செல்லும் சாலையில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் வாலாஜாபேட்டை வட்டம், மாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ரமணா (22), சா்மா (25), தேவதானம் கிராமத்தைச் சோ்ந்த தருண் (20) என்பதும், அவா்கள் மூவரும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், சாலையில் சென்ற நபரிடம் வழிப்பறி செய்த ரூ.15,000 மதிப்புள்ள கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT