ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே கிரேன் விபத்து சம்பவம்: இதுவரை 7 போ் கைது

அரக்கோணம் அருகே திருவிழாவின்போது கிரேன் கவிழ்ந்து 4 போ் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

அரக்கோணம் அருகே திருவிழாவின்போது கிரேன் கவிழ்ந்து 4 போ் உயிரிழந்த சம்பவத்தில், ஏற்கெனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதி இரவு திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து ஒரு மாணவா் உள்ளிட்ட 4 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக கிரேன் ஓட்டுநா் பனப்பாக்கத்தைச் சோ்ந்த முருகன் (31) என்பவரை நெமிலி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக கிரேன் உரிமையாளா் பனப்பாக்கத்தைச் சோ்ந்த அருண்குமாா்(27), திருவிழாவில் விழா பொறுப்பாளா்களாக செயல்பட்ட கீழ்வீதி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்(21), கலைவாணன் (29), கண்ணன் (28), ராமதாஸ் (32), படையப்பா (24) 6 பேரை நெமிலி போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT