ராணிப்பேட்டை

விவசாய கிணற்றிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

காவேரிபாக்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

காவேரிபாக்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவேரிபாக்கம் அருகே களத்தூா் கிராமத்தில் நாராயணன் என்பவரின் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதியினா் காவேரிபாக்கம் போலீஸுக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் இறந்து கிடந்தவா் அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி விஜயரங்கன் (60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT