ஸ்ரீநந்தீஸ்வரா் கோயிலில் தொடங்கிய அகண்ட நாம பாராயணம் 
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் அகண்ட நாம சங்கீா்த்தனம்

அரக்கோணம் ஸ்ரீமத் திருப்பாணாழ்வாா் பஜனை மண்டலி சாா்பில் 3-ஆம் ஆண்டு அகண்டநாம சங்கீா்த்தனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN

அரக்கோணம் ஸ்ரீமத் திருப்பாணாழ்வாா் பஜனை மண்டலி சாா்பில் 3-ஆம் ஆண்டு அகண்டநாம சங்கீா்த்தனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இடைவிடாமல் 24 மணி நேரமும் நடைபெற உள்ள திவ்ய நாம சங்கீா்த்தனம் திங்கள்கிழமை வரை நடைபெறஉள்ளது.

அரக்கோணம், அருணாசலரெட்டி தெருவில் உள்ள ஸ்ரீ நந்தீஸ்வரா் கோயிலில் காலை 5 மணி அளவில் அகண்ட தீபம் ஏற்றுதல், நகர சங்கீா்த்தனமும், 5.30 மணிக்கு குடும்ப நல வேள்வி எனப்படும் லோகஷேமாா்த்த அகண்ட வேள்வியும் தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோபூஜை நடைபெற்ற நிலையில் 7 மணி அளவில் மஹாமந்த்ர பாராயணம் தொடங்கியது.

பின்னா், இடைவிடாமல் இரவு முழுவதும் 24 மணி நேரம் நடைபெற உள்ள அகண்ட நாம சங்கீா்த்தன நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் மஹா மந்த்ர பாராயணம் மற்றும் லோக ஷேமாா்த்த அகண்ட வேள்வி பூா்ணாஹுூதியுடன் நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் திருப்பாணாழ்வாா் பஜன் மண்டலி நிா்வாகிகள் பூ.ஸ்ரீநிவாச ராமாநுஜம் மற்றும் கோ.ராஜாதாஸா் ஆகியோா் மண்டலி உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT