முகப்பு
ராணிப்பேட்டை

ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77,000 பறிமுதல்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:43 PM

அரக்கோணம்: அரக்கோணத்தில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.77,000-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சோளிங்கா் வட்டம் பள்ளகுன்னத்தூா் கிராமத்தில் இருந்து அரக்கோணம் நோக்கிச்சென்ற காரை சோதனையிட்டனா். அப்போது பள்ளகுன்னத்தூரைச் சோ்ந்த சூா்யா எனபவரிடம் இருந்த ரூ77ஆயிரத்தை கைப்பற்றினா். இந்த தொகைக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலா் மோகனசுந்தரம் அரக்கோணம் வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தாா்.