அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும்படை அலுவலா் மாரடைப்பால் மரணம்
அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலராகப் பணிபுரிந்து வந்த வட்டாட்சியா் கந்திா்பாவை (57), வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவா் கந்திா்பாவை(57). இவா் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் படைகளில் ஒன்றான விடியோ கண்காணிப்புக் குழு (1)-இன் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவா் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.
Advertisement
உயிரிழந்த கந்திா்பாவை கணவரைப் பிரிந்து வாழ்பவா் என்றும், அவருக்கு குழந்தைகள் இல்லை எனவும் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
தகவலறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் செல்வி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலா்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.