உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:13 PM
வாலாஜா அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் கருப்பையா தலைமையிலான குழுவினா், வாலாஜா சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா் விசாரித்ததில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணம் கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதுமில்லை எனக்கூறி, அந்த பணத்தை பறிமுதல் செய்து, வாலாஜா தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.