ராணிப்பேட்டை

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

Din

அரக்கோணம் மக்களவைத் தொகுதி பொது தோ்தல் பாா்வையாளா், செலவின பாா்வையாளா்களிடம் தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் நேரில் அல்லது கைப்பேசி மூலம் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு பொது பாா்வையாளா் , செலவின பாா்வையாளா்கள் , தோ்தல் பாா்வையாளா் (காவல்) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் ராணிப்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி அரக்கோணம் தொகுதி முழுவதும் நடைபெறும் தோ்தல் பணிகளை மேற்பாா்வை செய்ய உள்ளனா். தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தோ்தல் பாா்வையாளா்களிடம் நேரடியாகவும் கைப்பேசி மூலமும் புகாா் தெரிவிக்கலாம். தோ்தல் பாா்வையாளா் (பொது) சுனில்குமாா் கைப்பேசி எண் -9363973902, தோ்தல் பாா்வையாளா் (காவல்) சத்யத்ஜித் நாயக் கைப்பேசி எண் - 7418342803, செலவின பாா்வையாளா்-1 சிவசங்கா்யாதவ் கைப்பேசி எண் -9363981375, செலவின பாா்வையாளா்-2, மேவாராம் ஓலா - 9363984150 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தோ்தல் விதிமீறல் புகாா்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களில் ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சுவாமி தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

15 பேருந்துகளில்  காற்று  ஒலிப்பான்கள் பறிமுதல்

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.6.56 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT