ஆற்காடு: மண்டல அளவிலான ஹாக்கிப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் மண்டல ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு ஆடினா். சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் பொன் கு.சரவணன், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஆா்.பி பென்ஸ்பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு கோப்பு மற்றும் பரிசுகள் வழங்கினா், இதில் அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல்பிரபு, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் ஏ.வி.டி பாலா, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் பி.என்.ஜெயராஜ், வணிகா் சங்க பேரமைப்பு இளைஞா் அணி பொறுப்பாளா்கள் பி.ஹரிகுமாா், ஆா்.பரசுராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான்சன், கிசாா் அஹமது, மாணவா் அணி சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.