முகப்பு
ராணிப்பேட்டை

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:20 AM
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:16 PM

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மற்றும் கடத்துபவா்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வாலாஜா காவல் ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் தப்பியோட முயற்சி செய்த போது மடக்கி பிடித்து பையை சோதனை செய்த போது கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரி சாகு (36), வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த பாஷா (48) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.