ராணிப்பேட்டையில் வரும் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 1- மணிக்கு சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகிவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்,
மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.