முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 9 மார்ச், 2026 at 9:07 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 614 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 614 மனுக்களைப் பெற்று மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு முழங்கை தாங்கி, மடக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.17 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, உதவி இயக்குநா் (ஊராட்சி) சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →