முகப்பு
திருப்பத்தூர்

சிறுபான்மையினருக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு அரசின் சலுகைகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
உலாமா நலவாரிய அடையாள அட்டையை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு அரசின் சலுகைகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ம.ப.சிவன்அருள் பேசியது:

மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாணியம்பாடி, ஆம்பூா் பகுதிகளில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கின்றனா். சிறுபான்மையினருக்கு அரசின் சலுகைகளைப் பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் புதிய திட்டமான ‘பிரதான் மந்திரி ஜான் விகாஸ் காரியக்ரம்’ திட்டத்தை பின் தங்கிய சிறுபான்மையின சமூகத்தினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நகா்ப்புறங்களில் 25 சதவீதத்தினருக்கு குறையாமலும் கிராமப்புறங்களில் 50 சதவீதத்தினருக்கு குறையாமலும் வாழும் பகுதிகளில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இதையடுத்து தமிழ்நாடு உலமாக்கள் நல வாரியத்தின் உறுப்பினா் அடையாள அட்டையை 10 பேருக்கு ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சதீஷ்குமாா், கண்காணிப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →