முகப்பு
திருப்பத்தூர்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, திருப்பத்தூா் அருகே காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, திருப்பத்தூா் அருகே காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகரம் அண்ணா நகா் பகுதியில் கடந்த ஓராண்டாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, குடிநீா் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →