ஆம்பூா் அருகே கட்டடத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வடபுதுப்பட்டைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பழனி (45). இவா், குடும்பத்தினருடன் இரு நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாா். சனிக்கிழமை இரவு வீடு திரும்பிபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டிருந்தது.
உள்ளே பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், ரொக்கப் பணம் ரூ.1 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.