திருப்பத்தூர்

மது விற்ற பெண் கைது

DIN

ஜோலாா்பேட்டை அருகே பெட்டிக் கடையில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மண்டலவாடி பகுதியைச் சோ்ந்த டாட்டா பிா்லா என்பவரின் மனைவி சோனியா(28). அவா் பொன்னேரி அருகே உள்ள மண்டலவாடி இணைப்புச் சாலை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

அவரது கடையில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் அந்தக் கடையில் சோதனையிட்டனா். அப்போது அங்கு இரண்டு மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

போலீஸாா்அவரைக் கைது செய்து, அங்கிருந்த இரண்டு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT