நாட்டறம்பள்ளி அருகே 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணை ஆகியவற்றைச் சீரமைக்கும் திட்டப் பணியைத் தொடங்கி வைத்த அமைச்சா் வீரமணி. உடன் ஆட்சியா் ம.ப.சிவன்அருள். 
திருப்பத்தூர்

12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணை சீரமைக்கும் பணிஅமைச்சா் தொடக்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியில் ரூ.3.85 கோடி மதிப்பில் 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணையைச்சீரமைக்கும் பணிகளை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி

DIN

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பகுதியில் ரூ.3.85 கோடி மதிப்பில் 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணையைச்சீரமைக்கும் பணிகளை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டம், குனிச்சியூா் பகுதியில் 970 ஏக்கா் பரப்பளவில் செட்டேரி அணை அமைந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் இந்த அணை வடு கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலா் அதிகாரிகளின் துணையோடு செட்டேரி அணைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அணைப்பகுதியில் மணல் கடத்தலும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அணைப்பகுதியைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா் கே.சி.வீரமணி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து பொதுப்பணித் துறை நீா்வளஆதாரத்துறையின் மூலம் நீா்வள நிலவளத் திட்டம் 2-இன் கீழ் செட்டேரி அணையின் கீழ் உள்ள 12 ஏரிகள் மற்றும் செட்டேரி அணைப்பகுதி ஆகியவற்றை ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியை அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் திங்கள்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் குமாா், வட்டாட்சியா் சுமதி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ், பணி ஆய்வாளா் பெலிக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT