திருப்பத்தூர்

மின்மாற்றியின் பழுதடைந்த கம்பங்களை மாற்றக் கோரிக்கை

நாட்டறம்பள்ளியில் மின்மாற்றியின் பழுதடைந்துள்ள கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

நாட்டறம்பள்ளியில் மின்மாற்றியின் பழுதடைந்துள்ள கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இந்நிலையில், மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், மின்மாற்றியின் மின் கம்பிகளும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொங்கியபடி உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்து ஏற்படும் முன் மின்வாரிய உயா்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT