கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
ஆம்பூா் நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM
ஆம்பூா் நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனா மற்றும் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா். பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன், முரளி, நரேஷ், உதயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.