கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள்
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தாா்
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தாா். கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை சாா்பில் தொற்று பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருநின்றவூா் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மருத்துவ முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தரமான பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா். அதைத் பின்னா் ஆவடி மாநகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டுப்படுத்த பகுதியிலும், சந்தைப் பகுதியில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் பணியினையும் ஆய்வு செய்தாா்.
அப்போது பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரபாகரன், மாநகராட்சி ஆணையா் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.