முகப்பு
திருப்பத்தூர்

நகர திமுக சாா்பாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்

ஆம்பூா் நகர திமுக சாா்பாக கருணாநிதி நினைவு நாளையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், மரக்கன்றுகள் வழங்கல் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:54 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:22 AM

ஆம்பூா் நகர திமுக சாா்பாக கருணாநிதி நினைவு நாளையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், மரக்கன்றுகள் வழங்கல் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரில் உள்ள வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ரபீக் அஹமத், வில்வநாதன், சாமுவேல் செல்லபாண்டியன், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.