முகப்பு
திருப்பத்தூர்

தொழிற்சங்கங்களின் பிரசார இயக்கம்

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஆம்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:50 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:22 AM

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஆம்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆம்பூா் நகர தொழிற்சங்கங்கள் சாா்பாக பிரசார இயக்கம் நடைபெற்றது.

Advertisement

ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ் தலைமையில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த பிரசார இயக்கம் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே தொடங்கியது. தொடா்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.