ஆம்பூா் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதை சீரமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தென்னக ரயில்வே சாா்பில், ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடந்தன. இதையொட்டி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக ரெட்டிதோப்பு ரயில்வே பாலத்தின் கீழ் செல்லும் குகை வழிப்பாதை மூடப்பட்டது. வருவாய்த் துறையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் இயந்திரம் மூலம் சரி செய்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.