ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூா் கிராமத்தில் 65 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்தக் கிராமத்தில் 65-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினாா். மேலும், கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.