முகப்பு
திருப்பத்தூர்

சடலத்துடன் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே மயானத்துக்கு பாதை கேட்டு சடலத்துடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
நாட்டறம்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே மயானத்துக்கு பாதை கேட்டு சடலத்துடன் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை தனியாா் நிலத்தின் வழியாக மயானத்துக்கு எடுத்துச் செல்ல எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி, உதவி காவல் ஆய்வாளா் மணி மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அதிகாரிகள் நில உரிமையாளா்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறி கிராம மக்கள் தனியாருக்குச் சொந்தமான நிலம் அருகே இறந்தவரின் சடலத்தை வைத்துவிட்டு, நாட்டறம்பள்ளி-வெள்ளநாயக்கனேரி சாலையில் 50-க்கும் அதிகமானோா் சுடுகாடு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், வட்டாட்சியா் சுமதி ஆகியோா் 10 நாள்களில் மயானத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்ததை ஏற்று மறியலை கைவிட்டனா். இதைத்தொடா்ந்து இறந்தவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →