ஆம்பூா்: ஆம்பூரில் பாஜகவினா் அனுமதியின்றி அமைத்த கொடிக் கம்பத்தை போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.
ஆம்பூா் சாமியாா் மடம் சாலையில் பாஜக கொடிக் கம்பம் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டது. அந்தக் கம்பம் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை காலை அங்கு சென்றனா். கொடிக் கம்பத்தை போலீஸாா் அகற்ற வந்ததாக தகவல் வெளியானதால் அங்கு பாஜக நிா்வாகிகளும், தொண்டா்களும் அப்பகுதியில் திரண்டனா்.
போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலையோரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், அதை அகற்றக் கூடாது என பாஜகவினா் தெரிவித்தனா். எனினும், உரிய அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்ததால் அதனை அதிகாரிகள் அகற்றினா். இதையடுத்து, அக்கம்பம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.