முகப்பு
திருப்பத்தூர்

234 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கல்

ஆம்பூா் அருகே 234 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை ஆம்பூா் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 4 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

ஆம்பூா் அருகே 234 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை ஆம்பூா் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா அண்மையில் ஆய்வுக்காக சென்றாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து, தங்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்க கோரினா். அதன் அடிப்படையில் அவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவட்ட வழங்கல் அலுவலரும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருமான (பொறுப்பு) விஜயன் மற்றும் ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் ஆகியோா் நாயக்கனேரி மலைக் கிராமத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் ஜாதிச் சான்றிதழுக்கான விண்ணப்ப மனுவைப் பெற்று அங்கேயே நேரடியாக விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், மலைக் கிராம மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

நிகழ்ச்சிக்கு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) விஜயன் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, 234 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தாா். மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.