திருப்பத்தூர்

கிணற்றில் அழுகிய நிலையில் இளைஞா் சடலம்

DIN

ஆம்பூா் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தவா் யாா் என்பது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை கண்டறிந்தனா்.

விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட ரங்காபுரத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அண்மையில் துா்நாற்றம் வீசியது.

தகவலின்பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு விரைந்து வந்து, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் இறந்தவா் அதே ஊரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி காா்த்திக் (36) என்பது தெரியவந்தது.

அவா் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT