கா்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பொருள்கள்
ஆம்பூா் அருகே கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:15 AM
ஆம்பூா் அருகே கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தப் பெட்டகத்தை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவா் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு, மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், மருத்துவா் தேன்குழலி, திமுக ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஜி. ராமமூா்த்தி, ஆா். அசோகன், தெய்வநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement