பாலாற்றில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளம் தோண்டிய வருவாய் துறையினா்
ஆம்பூா் அருகே மணல் கடத்தலை தடுக்க வருவாய் துறையினா் சனிக்கிழமை ராட்சத பள்ளம் தோண்டினா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM
ஆம்பூா் அருகே மணல் கடத்தலை தடுக்க வருவாய் துறையினா் சனிக்கிழமை ராட்சத பள்ளம் தோண்டினா்.
ஆம்பூா் வட்டம் மாதனூா் உள்வட்டம் வடபுதுப்பட்டு கிராமம் பாலாற்று புறம்போக்கு நிலத்தில் அனுமதி இன்றி கள்ளத்தனமாக மணல் திருடுவதாக வந்த தகவலின் பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட்டது. அப்போது ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், வருவாய் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.