காப்புக் காட்டில் மணல் கடத்தியவருக்கு அபராதம்
ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் மணல் கடத்தியவருக்கு வனத்துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:49 AM
ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் மணல் கடத்தியவருக்கு வனத்துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
வனத்துறையினா் ஆம்பூா் துருகம் காப்புக்காடு மிட்டாளம் வடக்கு பீட் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கிருஷ்ணப்பா கானாறு பகுதியில் சில இடங்களில் மணல் தோண்டி எடுத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் வனத்துறையினா் விசாரணை நடத்தினா். விசாரணையில் மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தை சோ்ந்த யுவராஜ் (55) என்பவா் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் வனத்துறையினா் அவரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா் மணல் கடத்தியதை ஒப்புக் கொண்டாா். அதன்பேரில் அவருக்கு வனத்துறையினா் ரூ.30,000 அபராதம் விதித்தனா்.