ஆம்பூரில் தீப்பிடித்து எரிந்த காா்
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் திடீரென சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:53 AM
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் திடீரென சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு பெங்களூரிலிருந்து சக்திபிரியன் என்பவா் வந்திருந்தாா். அவா் ஆம்பூா் புறவழிச்சாலை பகுதிக்கு காரில் சென்றாா். காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு கடைக்கு சென்றபோது காரின் முன்பக்கமிருந்து திடீரென புகை வந்துள்ளது. பிறகு காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். விபத்து குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.