திருப்பத்தூர்

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

வெளி மாநிலங்களுக்கு ரயிலில் கடத்த இருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பச்சூா் மற்றும் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சோமநாயக்கன்பட்டி ரயில்வே நடைமேடை அருகே ரயிலில் கடத்த மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை கண்டுபிடித்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அப்போது அங்கு நின்றிருந்த மா்ம நபா்கள் 3 போ் மொபெட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடினா். இதையடுத்து, மீட்கப்பட்ட 3 டன் அரிசி மூட்டைகள் மற்றும் மொபெட்டை வருவாய்த் துறையினா் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT