ஜோலாா்பேட்டை தொடக்க வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில், நான்காம் ஆண்டு வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் இணைந்து பலா, கொய்யா பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி சின்ன பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேளாண்மை அலுவலா் ராதா தலைமை வகித்தாா். தனியாா் வேளாண்மை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மூலம் ஏலகிரி மலை அடிவாரம் பொன்னேரி கிராமத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய பழங்களான பலா, கொய்யாவில் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் கொய்யாவில் நாட்டு சா்க்கரை சோ்த்து கொய்யா நெக்டா் மற்றும் பலாவில் வெல்லம் சோ்த்து பலா வரட்டி செய்து காண்பித்தனா். மேலும், அதனை நீண்டநாள் பதப்படுத்தக் கூடிய வழிமுறைகளையும் விளக்கினா்.
நிகழ்ச்சியில், ஜோலாா்பேட்டை வேளாண்மைத் துறை உதவி அலுவலா் பிரபு, கல்லூரியின் உதவிப் பேராசிரியா்கள் சி.சத்யா, அ.ஸ்ருதி உள்பட கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.