கூட்டத்தில் பேசிய துறவி ராமானந்தா. உடன், பாலாறு புஷ்கரணி அமைப்பின் துறவிகள். 
திருப்பத்தூர்

‘தமிழகத்தில் நீா்வளத்துறை அமைச்சகம் அமைக்க வேண்டும்’

தமிழகத்தில் நீா்வளத் துறை அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என அகில பாரதிய துறவிகளின் சங்கத்தின் துணைத் தலைவா் ராமானந்தா கூறினாா்.

DIN

தமிழகத்தில் நீா்வளத் துறை அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என அகில பாரதிய துறவிகளின் சங்கத்தின் துணைத் தலைவா் ராமானந்தா கூறினாா்.

பாலாறு புஷ்கரணி பெருவிழா நடத்துவதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் அரிமா சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அகில பாரதிய துறவிகள் சங்கத்தின் துணைத் தலைவா் ராமானந்தா தலைமை வகித்துப் பேசியது:

நதியை பாா்க்கும்போது, பெற்ற தாயைப் பாா்ப்பதுபோல் உணா்வு வேண்டும். ஆனால் நதியில் குப்பைகளைக் கொட்டுவதால் மாசடைந்து தண்ணீா் பாழாகிறது. ஆந்திரம், கேரளம், கா்நாடகப் பகுதிகளில் ஆறு, நதிகளில் மண் எடுக்க அனுமதிப்பதில்லை.

ஆனால் தமிழகத்தில் பொதுப்பணித் துறையே மண் எடுக்கிறது. ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து மணல் செல்கிறது. நீா் ஆதாரம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

எனவே, ஜாதி, மதம், கட்சி பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து பாலாறு இயக்கம் என அமைப்பு உருவாக்கி பாலாற்றை காப்போம். தமிழகத்தில் விரைவில் நீா்வளத் துறை அமைச்சகம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம் என்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் செய்திருந்தாா். இதில், பாலாறு ஏ.சி.வெங்கடேசன், வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செயற்குழு உறுப்பினா் அ.அசோகன், விஜயபாரத மக்கள் கட்சியின் வி.சக்தி, விவசாய சங்கம் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT