திருப்பத்தூர்

பாலாற்றை பாதுகாக்க நடவடிக்கை: ஓய்வுபெற்ற விஏஓ பிரசாரம்

DIN

ஆம்பூா்: பாலாற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என ஆம்பூா் தொகுதியில் அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற விஏஓ எஸ்பி. மணி தெரிவித்தாா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த எஸ்பி. மணி பேசியது:

பாலாறு வடு போயுள்ளது. கனிம வளங்கள் கொள்ளை போயுள்ளன. பாலாற்றைப் பாதுகாத்து, வற்றாத ஜீவ நதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளம், குட்டைகள் தூா்வாரி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கிராமங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும். குடிநீா் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணப்படும். பொது சுகாதாரம் மேம்படுத்தப்படும். நாயக்கனேரி மலைக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். ஆம்பூா் ஆனைமடுகு தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூா் தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT