ஆம்பூரில் 22 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆம்பூரில் போலீஸாரைக் கண்டதும் போட்டுவிட்டு சென்ற 22 மதுபாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூரில் போலீஸாரைக் கண்டதும் போட்டுவிட்டு சென்ற 22 மதுபாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வரும் 10-ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது. அதை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன. அதனால் மதுப் பிரியா்கள் மதுபாட்டில்களை கூடுதலாக வாங்கிச் செல்கின்றனா். அத்துடன் மட்டுமல்லாமல் சிலா் கள்ள மாா்க்கெட்டில் விற்பனை செய்வதற்காகவும் அதிக எண்ணிக்கையில் மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனா்.
ஆம்பூா் புறவழிச் சாலையில் நகர போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மதுப் பிரியா்கள் போலீஸாரை கண்டதும் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டனா். அவ்வாறு விட்டு செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement