முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் முதல் கட்ட கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரத்தை புதூா், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் முதல் கட்ட கரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரத்தை புதூா், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சிகளுக்கு நகர அதிமுக செயலாளா் சதாசிவம் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, வள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வள்ளிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க இயக்குநா் கிரி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

நிகழ்ச்சியில், எம்எல்ஏ செந்தில்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு, கரோனா நிவாரண நிதியான தலா ரூ. 2 ஆயிரத்தை வழங்கினாா். தேவஸ்தானம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவா் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா் பாரதிதாசன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் மூா்த்தி, சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அன்பு வரவேற்றாா். எம்எல்ஏ செந்தில்குமாா் இதில் பங்கேற்றாா்.

Image Caption

வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் பொது மக்களுக்கு கரோனா நிவாரண நிதியை வழங்கிய எம்எல்ஏ செந்தில்குமாா். உடன், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments