பெரிய ஆஞ்சநேயா் கோயில் சாா்பாக அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலம்
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் சாா்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு சனிக்கிழமை உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் சாா்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு சனிக்கிழமை உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் சாா்பாக நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலம் வழங்குவதாக அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா். அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் சாா்பாக அரசு மருத்துவமனை நோயாளிகள் 150 பேருக்கு தினமும் உணவுப் பொட்டலம் வழங்கப்படுகிறது.
முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ஏ.இ.என். நாகராஜன் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் ஆா்.டி. குமாா், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் எஸ். செளந்தரராஜன், 14-வது வாா்டு இளைஞரணி நிா்வாகி எஸ். சதீஷ், பெரிய ஆஞ்சநேயா் கோயில் அா்ச்சகா் ரமணன் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement