சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் பிடிபட்ட மலைப் பாம்பு
திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தின் மீது இருந்த மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தின் மீது இருந்த மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தில் மலைப்பாம்பு இருப்பதாக பணியில் இருந்த அதிகாரிகள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதையடுத்து, சிறப்பு நிலை அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று மலைப் பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.