திருப்பத்தூர்

100 ஆண்டுகளுக்குப் பின்னா் நிரம்பிய குளம்

DIN

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊட்டல் தேவஸ்தான தீா்த்தக் குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழியத் தொடங்கியது.

ஆம்பூா் அருகே ஊட்டல் தேவஸ்தானத்தில் சரஸ்வதி, வேணுகோபால சுவாமி, சப்த கன்னிகள் சன்னதிகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தா்கள் இங்கு சென்று வழிபடுவது வழக்கம். அதே போல அங்குள்ள வற்றாத தீா்த்தக் குளத்தில் குளித்தால் சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

அந்தத் தீா்த்தக் குளம் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நிலத்தடி நீா் மட்டும் வெகுவாக உயா்ந்து தீா்த்தக் குளத்தில் தண்ணீா் நிரம்பி தானாகவே வெளியேறி வருகிறது.

தகவலறிந்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். தொடா்ந்து வற்றாத தீா்த்தக் குளத்தில் பூக்களைத் தூவி வழிபட்டாா். அப்போது, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT