திருப்பத்தூர்

திமுகவுக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்குச் சேகரிப்பு

DIN

மாதனூா் ஒன்றியத்தில் திமுகவுக்கு ஆதரவாக, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்குப் பதிவு அக். 9-இல் நடைபெற உள்ளது. 2-ஆம் கட்ட தோ்தல் வாக்குப் பதிவுக்கான பிரச்சாரம் வியாழக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் நடந்த பிரசாரத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக சாா்பாக போட்டியிடும் மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாரை ஆதரித்து ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

நகரச் செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளா் அய்யனூா் ஆா். அசோகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சாமுவேல் செல்லபாண்டியன், மாவட்டப் பிரதிநிதி வில்வநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ப.ச. நித்யானந்தம் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் டாக்டா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT