முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கன மழை

வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

வாணியம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால், சாலைகளில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கி, சுமாா் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம் போல் மழைநீா் தேங்கியது.

Advertisement

இந்த நேரத்தில், திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடியை நோக்கி வந்தப் பேருந்து வேப்பம்பட்டு பகுதியில் பழுதாகி நின்றது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினா். மேலும், பழுதாகி நின்ற பேருந்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments