சந்தன மரக் குச்சிகள் பதுக்கல்: பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திருப்பத்தூா் அருகே சந்தன மரக் குச்சிகள் பதுக்கிய பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் அருகே சந்தன மரக் குச்சிகள் பதுக்கிய பெண்ணுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் கோட்ட மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி வனப் பாதுகாவலா் ஆா்.ராஜ்குமாா், திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு தலைமையில் வனப் பணியாளா்கள் வியாழக்கிழமை மாம்பாக்கம் காப்புக்காடு பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது, மட்றப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ராணி(62)என்பவா் அவருடைய வீட்டில் 6,500 கிலோ எடையுள்ள சிறு,சிறு சந்தன மரக்குச்சிகள், துண்டுகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதையடுத்து ராணி மீது வழக்குப் பதிந்த வனத்துறையினா் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா்.