முகப்பு
திருப்பத்தூர்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி தீவிரம்

ஆம்பூா் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 12:28 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:29 PM

ஆம்பூா் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

கானாற்றில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தில் அய்யனேரி மேடு என்ற பகுதியில் தற்காலிக தரைப்பாலம் வியாழக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் பொதுப்பணித் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு சேதமடைந்த தற்காலிக தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

அதன் பேரில், தரைப்பாலத்தைச் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியை எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.