பகுதிநேர நியாய விலைக்கடை திறப்பு
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி பாட்டூா் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:29 PM
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி பாட்டூா் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா். வட்டாட்சியா் மகாலட்சுமி, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.