வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி
ஆம்பூா் அருகே வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை மாலை இறந்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM
ஆம்பூா் அருகே வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை மாலை இறந்தது.
ஆம்பூா் அருகே சோமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா். இவரது 3 வயது பெண் குழந்தை வா்ஷினி வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டின் மாடி சுவா் இடிந்து கீழே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த குழந்தை ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement