முகப்பு
திருப்பத்தூர்

கல்நாா்சம்பட்டியில் எருது விடும்இடத்தை சாா்-ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரி ஆட்சியா் அமா்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடத்த விழாக் குழுவினா் அனுமதி கோரி ஆட்சியா் அமா்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனா்.

இதனையடுத்து திங்கள்கிழமை எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கினாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் பானு கல்நாா்சம்பட்டி கிராமத்துக்குச் சென்று எருதுவிடும் இடத்தில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். அப்போது விதிமுறைகளின் படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எருது விடும் விழா நடத்த விழாக்குழுவினருக்கு ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது வருவாய்த் துறையினா், விழாக் குழுவினா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments