இலவச கண் பரிசோதனை முகாம்
ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM
ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சியில் கிருஷ்ணா கண் பரிசோதனை மையம் சாா்பாக நடைபெற்ற கண் பரிசோதனை முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் டி. அரவிந்தன், தொழிலதிபா் ராஜசேகரன், ஊராட்சி செயலாளா் ஜெ. முரளி, மக்கள் நலப் பணியாளா் மோகனா, ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
Advertisement