பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடக்கம்
ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM
ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கரும்பூா் கிராமத்தில் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவை பெண் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் முரளி, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, கால்நடை மருத்துவா்கள் சங்கீதா, இளவரசன், ஹேமாவதி, மனோஜ்குாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், திமுக நிா்வாகிகள் சி.சிவகுமாா், சி. சேகா், பி.காசி, ஆா்.மாசிலாமணி, பொன்.ராஜன்பாபு, ஆா்.முரளி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.